உணவே மருந்து வலை தளத்திற்க்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் :

இவ்வுலகில் வாழும் மனிதர்கள் கால மாற்றங்களாலும், விஞ்ஞான கண்டுப்பிடிப்புகளாலும், அதன் ஆளுமையினாலும் மற்றும் இயற்கையின் அற்புதங்களை முறையாக எழுதப்படாததால் பின்பற்ற முடியா நிலை உள்ளது. உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் இயற்கை மட்டுமே சிறந்த கடவுள் ஆகும். மனிதர்களுக்கு தேவையான அனைத்து மூலப்பொருள் இயற்கையிலிருந்தே பெறப்படுகிறது. அதை நாம் கையாளும் விதத்திலேயே நோயற்ற வாழ்வை பெற முடியும்.

இயற்கையோடு ஒன்றி வாழும் வாழ்க்கை முறையே மிக சிறந்த வாழ்க்கை. இதனை உணர்த்தவும், இயற்கையிலிருந்து வரும் பழங்கள், காய்கறிகள், மூலிகைகள், தானியங்களின் மருத்துவ பயன்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கவும், அதை பாதுகாக்கவும், பல்வேறு இயற்கை விஞ்ஞானிகலிடம் பல நுன்ணிய மருத்துவ குறிப்புகளை பெற்று மக்கள் நோயற்ற பெரு வாழ்வு பெற்றிடும் நோக்கத்திலும்  மற்றும் எம் குரு திருமூலர் பெருமைகளை இவ்வுலகிற்கு உணர்த்தவும் இத்தளத்தை உருவாக்கி உள்ளோம்.